கதிரோட்டம் 04-09-2020
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து பெரும் பேசு பொருளாகியுள்ள அரசியலமைப்புக்கான 20 வது திருத்தம் தொடர்பான சட்ட வரைவுக்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திருத்தச் சட்டமூலமானது அரசியலமைப்புக்கான 19வது திருத்தச் சட்டத்தைத் திருத்தியமைக்கும் வகையில் அமைகின்றது என்று சொல்லப்பட்டாலும அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் முக்கிய பங்குவகிக்கும் அமைச்சர்கள், பேச்சாளர்கள் மற்றும் கட்சிக்காரர் பலரை அவதானிக்கும் போது, இந்த புதிய திருத்தச் சட்டத்தால் தமிழர்களும் தமிழ்த் தலைவர்களும் எதிர்பார்க்கும் தீர்வு வந்து விடாது என்பதே உறுதி என்பதை கொழும்பில் உள்ள பல தமிழ் பேசும் பத்தி எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கிவிட்டார்க்ள
ஐ.தே.க. தலைமையிலான கடந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததும் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தை அவசர அவசரமாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து நிறைவேற்றியது.
ஆனாலும் அந்த திருத்தமானது தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வையும் தந்துவிடவில்லை. ஆனாலும் தமிழ் மக்களை பிரதிநிதி;துவம் செய்த பாராளுமன்ற உறுப்பி;னர்கள் பலரி;ன் பொருளாதார பலத்தை தூக்கி நிறுத்தியது என்றே சொல்லலாம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கையாகக் கூறிக் கொண்டு வரப்பட்ட இத்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல் நிலைகள் தோற்றம் பெற்று நீடித்து வந்தது.
இவ்வாறு சூழலில் 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீல.பொ. பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 19வது திருத்தத்தின் ஊடாக நாட்டில் ஏற்பட்டுள்ள பலவீனங்களையும் வீழ்ச்சிகளையும் திருத்தியமைத்து தேசிய பாதுகாப்பையும் நாட்டையும் பாதுகாப்பதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார். அதற்கேற்ப மக்கள் அவருக்கு பெரும்பான்மை ஆதரவு நல்கி ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர். ஆனாலும் தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்கள் மற்றும் அரசியல் அபிலாசைகள் ஆகியன தீர்ந்துவிடும் என்;ற நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.
சுpங்களத்தையும் பௌத்தத்தையும் முழுத் தேசத்திலும் நிலை நிறுத்துவதே அனைவரதும் போக்காகவும் ‘வெறி’யாகவும் உள்ளதுஃ ஆகவே பாராளுமன்றம் என்னும் கூடாரம், சிங்களத்திற்கும் பௌத்தத்திற்கும் உரியதாகவே மாறப்போகின்றது.
இறுதியில் என்ன நடக்கப்பபோகின்றது என்பதை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக உள்ளது. பாராளுமன்ற உறுப்பினராகிவிட்ட விக்கினேஸ்வரன் ஐயாவும் கஜேந்திரகுமாரும் பாராளுமன்றத்தில் எமது பிரச்சனைகளை ஓயாது பேசி நிற்பதும், அதற்கு தீர்வோ அன்றி விடிவோ கிட்டாமல் நாட்கள் கழிந்து செல்ல, தமிழர்கள் மீண்டும் மீண்டும் மொழியின் அடிப்படையிலும் இனத்தின் அடிப்படையிலும் கொடுமையான பாதிப்புக்களை சந்திப்பார்களா என்ற கேள்வியைக் கூட மிகுந்த பதட்டத்துடன் இங்கே பதிவு செய்கின்றோம்.