முன்னைய மைத்திரி- ரணில் ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் அவர்கள் பெயருக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் அரசுக்கு எதிராக அப்போதைய சிங்கள எதிர்க்கட்சிகள் கொண்டு வருகின்ற அனைத்து பிரேரணைகளையும் எதிர்த்து வாக்களித்து அனைத்தையும் தோல்வியுறவே செய்தார்.
இவ்வாறான ஒரு அதே நிலைப்பாட்டிலேயே தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் தனது பதவியை அரசாங்கத்தைக் காப்பாற்றும் அல்லது நியாயப்படுத்து வேலையை செய்து வருகின்றாரா என்று கொழும்பு தமிழ்ப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கு உதாரணமாக பின்வரும் செய்தியை அவர் தனது கருத்துக்களோடு இணைத்துள்ளார்.
அரசியலமைப்பால் ஜனாதிபதியையும், பிரதமரையும் பலவீனப்படுத்தக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.