கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியின் மாணவர்களில் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தால் ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படவுள்ளது.