ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு தவறுகளை மக்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள் என எனக்கு நன்றாக தெரியும். இதற்கு முதல் கடமையாற்றிய அரசாங்க அதிபர்களுக்கு எவ்வாறான ஒத்துழைப்பை வழங்கி வந்தீர்களோ அதேபோன்று எனக்கும் ஒத்துழைப்பை தரவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று 17ம் திகதி தனது பதவியை பொறுப்பேற்ற பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, அரசாங்கத்தால் உடனடியாக இடமாற்றம் மற்றும் பணி மாற்றம் ஆகிய நெருக்குதல்களுக்கு உள்ளாகிய முன்னாள் மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிற்கு வழங்கப்பட்ட பிரியாவிடை வைபவத்தில் அவர் ஆற்றிய சிற்றுரை கூட தமிழ் மக்களுக்கு உற்சாகத்தைத் தருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.