வீதியை கடக்க முயன்ற மாணவன் மீது மோதுவதை தவிர்ப்பதற்கு பஸ்ஸின் சாரதி முயன்ற போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ரயில்வே கடவையுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது.
இந்தச் சம்பவத்தில் பஸ் மோதியதில் மீசாலை மேற்கை சேர்ந்த கோகுலன் லக்சிகன் (வயது-15) என்ற மாணவன் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.