இலங்கை போக்குவரத்துச் சபை யின் பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்றிரவு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிலாபம் – இரணவில கோவிட் – 19 சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் அங்கு சிகிச்சை நிலையம் அமைக்கும் பணி இன்று மாலைக்குள் நிறைவு செய்யப்படாத நிலையில் அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கோவிட் -19 நோய் சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்படுகிறது.
மருதங்கேணி பிரதேச மருத்துவமனை கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு முன்பாக இன்று காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்