20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தபோது நான் எதிர்பார்த்த சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. இவை எதைக் காட்டுகின்றன என்றால் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலல் தமது சொந்த அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உறுப்பினர்கள் சகல கட்சியில் உள்ளதையே காட்டுகின்றது.
எனவே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியி லிருந்து வெளியேற்றிய பின்னர் மேலதிக சட்ட நடவடிக் கைகள் எடுக்கப்படும் .அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனநாயக ரீதியாக முடிவுகளை எடுக்கும் உரிமை உள்ள போதும் ஒரு குழு என்ற ரீதியில் எடுக்கும் தீர்மானத்திற்கு எதிராகச் செயற் படுவதை அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலை வர் மேலும் தெரிவித்தார்.