தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள வாழைச்சேனை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இராணுவத்தினர் பொலிஸாரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதானவீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
வாழைச்சேனையில் 27 பேரும் பொத்துவிலில் 5 பேரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்கள் கரடியானறு கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, அவர்களது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பொதுசந்தைகள் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.