மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஒருபோதும் தடையாக இருக்காதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, “ஊரடங்கு சட்டம் பரீட்சைகளுக்குத் தடையாக இருக்காது என்பதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் சரியான நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு அதிகபட்ச உதவிகளை பெற்றோர் வழங்க வேண்டும்.
மேலும், இன்றைய தினம் கணக்கீடு வினாத்தாளுக்குச் சாதாரண திட்டமிடப்படாத கணிப்பான்களைப் பயன்படுத்துவதற்கும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.