தாயக நலனில் அக்கறை கொண்ட தமிழ் அன்பர்கள் வேண்டுகோள்
“அண்மையில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள இளைஞர்களுக்கான காணித் துண்டுகள் வழங்கும் திட்டத்தை எமது இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பல நன்மைகள் எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கும். எனவே சற்றும் தாமதிக்காது, மேற்படி காணித்துண்டுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் விண்ணப்பங்களை உரிய அரச அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டுகின்றேன்”
இவ்வாறு எமது தாயக நலனில் அக்கறை கொண்ட தமிழ் அன்பர் எமது அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள பிரசுரம் ஒன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேற்படி வேண்டுகோளில் அடங்கியுள்ள விபரங்களை நாம் கீழே தருகின்றோம்
ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது!! ..
ஆனால் எங்கள இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை!! மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது!!
நம் இளைஞர்கள் அக்கறை காட்டவில்லை என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது!!
காணி கிடைத்தால் முழுநேர விவசாயம் தான் செய்யவேண்டியதில்லை!!! காணியில் வெறுமனே விவசாயம் மட்டும் தான் செய்ய முடியும் என்ற மாயையில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்!!
நீங்கள் இன்று பெருமளவில் விண்ணப்பிக்காமல் விடுவதால் என்ன நடக்கலாம் என்பதை முதலில் கூறிவிடுகிறேன்!!
தமிழ் மக்கள் அல்லாதவர்கள் கூட பெருமளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை பெற்றுக்கொண்டு தங்கள் தொழில்களை/விவசாயத்தை முன்னெடுத்து காலப்போக்கில் நிரந்தரமாக அந்த பிரதேசங்களில் குடியேறிவிடவும் கூடும்…
அப்போது வந்து நின்று குத்துது குடையுது என்று கோசம் போடுவீர்கள்!!
இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை இன்னொருவர் பறித்துக்கொள்வார் அல்லது பயன்படுத்திக்கொள்வார்!!
முக்கியமாக முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் அதிகம் அரச காணிகள் இருக்கின்றன.
அத்துடன் அரச காடுகளையும் பயன்படுத்திக்கொள்ள மாவட்டங்களுக்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. காட்டு இலாகாவும் இணைந்து செயற்பட உள்ளது!!
இன்று இந்த வாய்ப்பு தமிழ் இளைஞர்கள் பயன்படுத்தாவிடின் நாளை இதன் விளைவுகள் உங்களுக்கு எதிராகவும் எங்கள் அரசியல் கட்சிகள் இவ்வாறான தேவையான நேரங்களில் அடைகாத்துவிட்டு, பின்னர் மக்களை திரட்டி தங்கள் அரசியலுக்காக கூச்சலிடும் சூழலை மட்டுமே விட்டுவைக்கும்..
சரி யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்??
45 வயதுக்கு உட்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்!!
நீங்கள் எந்த தொழில் செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை!! அந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்!!
இலகுவாக என்ன செய்யலாம்??
தேக்கு மரக்காடுகளை உருவாக்குங்கள்!!
இன்று தென்பகுதிகளில் பல நிறுவனங்கள் அதை மிகப்பெரிய இலாபம் ஈட்டும் தொழிலாக செய்கிறார்கள்!!
மிகச்சிறிய முதலிடு!! ஒரு வருடம்( இரண்டு மழைகள்) கவனமாக பராமரித்துவிட்டு அதன்பின் அவ்வப்போது கவனித்தால் போதும்!!
10 வருடங்களில் மிகப்பெரிய இலாபம் ஈட்டலாம்!! தளபாட உற்பத்தி துறை, மர ஏற்றுமதியில் நிறைய வாய்ப்புகள் உண்டு!
தவிர, வேறு விவசாய உற்பத்திகள் உட்பட கரையோர பகுதிகளில் காணிகள் கிடைத்தால், உவர்நீர்/ நன்னீர் மீன்வளர்ப்பு, இறாள் வளர்ப்பு உள்ளிட்ட பல லாபமீட்டும் சுயதொழிலை செய்யலாம்!!
உவர்நீர் இறாள் வளர்ப்பு திட்டங்களுக்கு 50% வரை மிக சிறிய வட்டியுடன் கடன் கிடைக்கிறது.
3-4 வருடங்களில் போட்ட முதலீட்டை மீளப்பெற்று விடும் அளவுக்கு லாபகரமாக செய்யலாம்..
குறிப்பாக எவ்வாறான இடங்களில் அதிகம் விண்ணப்பிக்க வேண்டும்??
யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் மிகக் குறைவு.. ஆக உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படவும் கூடும்..
பின்வரும் இடங்களை தெரிவு செய்யுங்கள்!!
மாந்தை கிழக்கு
மாந்தை மேற்கு
வவுனியா வடக்கு
ஒட்டிசுட்டான்
நெடுங்கேணி
புதுக்குடியிருப்பு
மாங்குளம்
விண்ணப்ப முடிவு திகதி நீடிக்கப்பட்டு இன்னும் 5 நாட்களே மீதம் உள்ளன..
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
முதலாவது கொமண்டில் உள்ள விண்ணப்பங்களை நிரப்பி பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவிடுங்கள்!!
முதலில் காணிகளை பெற்றுக்கொள்ளுங்கள்!! செய்யக்கூடிய வேலைகள் ஏராளம் உள்ளன!!
யாருக்காவது உதவி தேவைப்படின் உட்பெட்டியில் தொடர்புகொள்ளுங்கள்!!
ஒரு சமூகமாக நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்வோம்
நன்றி
-திருநாவுக்கரசு தயந்தன்!