பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை
இளம் தொழில்முனைவோர்களுக்குஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டம் ஒன்றைக் காணிமுகாமைத்துவஅலுவல்கள்இராஜாங்கஅமைச்சுமுன்னெடுத்துள்ளது. இதற்கானவிண்ணப்பங்கள் குறைவாகவேகிடைக்கப் பெற்றநிலையில் விண்ணப்பமுடிவுத் திகதிநொவம்பர் 15ஆம் திகதிஎனக் காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று,மகாவலிஅதிகாரசபையும் கைத்தொழில் முதலீட்டுச் செயற்திட்டத்துக்குமகாவலிக் காணிகளைநீண்டகாலக் குத்தகைக்குவழங்குவதெனத் தீர்மானித்துடிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு அறிவித்துள்ளது. இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல ஜனாதிபதியும் பாதுகாக்கப்பட்டவனப் பகுதிகள் தவிர்ந்தஏனைய வனப்பிரதேசங்கள்அபிவிருத்திக்கு உட்படுத்தப்படவுள்ளனஎன்றுஅறிவிப்பைவெளியிட்டுள்ளார். இவை நாடு அபிவிருத்திப் பாய்ச்சல் ஒன்றுக்குத் தயாராகின்றது என்பது போலத் தோற்றம் காட்டினாலும் சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கான முன்னேற்பாடாகவே இவற்றைக் கருதவேண்டியுள்ளது.
தமிழ்த்தரப்பு சுதாகரிக்காது விடின் எஞ்சியுள்ளநிலமும் பறிபோகும் அபாயம் உள்ளது என்றுதமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இளம் தொழில் முனைவோருக்குஒரு இலட்சம் காணித் துண்டுகள் வழங்கும் திட்டம் குறித்துபொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறுஎச்சரித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள தொழில் முனைவோருக்குகாணித் துண்டுகள் வழங்கும் செயற்திட்டம் கொள்கையளவில்ஏற்றுக்கொள்ளத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமானஒருநிலச் சீர்திருத்தச் செயற்பாடுஆகும். ஆனால்,நடைமுறையில் கடந்தகாலங்களில் அரசாங்கங்கள் மேற்கொண்டகாணிப் பங்கீடுகள்யாவும் அபிவிருத்திஎன்றபெயரில் இடம்பெற்றசிங்களக் குடியேற்றத்திட்டங்களேஆகும். கிழக்குமாகாணத்தில் இடம்பெற்றகல்லோயாத் திட்டம்,அல்லைகந்தளாய்த் திட்டம்,மகாவலிஅபிவிருத்தித் திட்டங்கள் ஊடாகஅரசாங்கம் அங்குசிங்களக் குடியேற்றங்களைநிறுவிதமிழ் – சிங்களமக்களின் இன விகிதாசாரத்தையே மாற்றிஅமைத்துள்ளது. வடக்குக்குமகாவலியிலிருந்துஒருதுளிநீர் தன்னும் இதுவரைகிடைக்காதநிலையிலும் மகாவலிஅதிகாரசபைமுல்லைத் தீவுமாவட்டத்தின் கரைத்துறைப்பற்றுபிரதேசசெயலர் பிரிவில் உள்ளதமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருந்தொகை வயற் காணிகளைமணலாற்றில் வலிந்துகுடியேற்றியிருக்கும் சிங்களமக்களுக்கு வழங்கியுள்ளது.
வடக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபின்னர் சர்வதேசநாடுகளின் அழுத்தம் காரணமாக இராணுவத்தால் கைப்பற்றப்பட்டகாணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டாலும், அரசாங்கம் சூழல் பாதுகாப்புஎன்றபெயரில் பச்சையுத்தம் ஒன்றைத் தொடுத்துப் பாரியளவு நிலப்பரப்பைப் பறித்து வைத்துள்ளது. காடுபேண் கட்டளைச் சட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா,மன்னார் மாவட்டங்களில் 5 இலட்சம் ஏக்கர்கள் புதியஒதுக்குக் காடுகளாகவும்,மன்னார் மாவட்டத்தில் ஒரு இலட்சம்ஏக்கர்கள் புதியபேணற் காடுகளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. வன உயிரிகள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் நாகர் கோவில், நெடுந்தீவு சரணாலயங்களும் மன்னார் மாவட்டத்தில் மடுவீதி சரணாலயங்களும் சுற்றயற் பிரதேசங்கள் உள்வாங்கப்பட்டுஏறத்தாழ இரண்டே முக்கால் இலட்சம் ஏக்கர்கள் அளவில் தேசியப் பூங்காக்களாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளன. இவை யாவற்றினுள்ளும் தமிழ் மக்கள் பூர்வீகமாகவாழ்ந்தகுடியிருப்புப் பகுதிகளும் வயற்காணிகளும்; அடங்கியுள்ளன.
மகாவலி அதிகார சபை,வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம்,தொல்லியல் திணைக்களம் போன்றவற்றால் அரசாங்கம் பறித்ததங்கள் பூர்வீக நிலங்களை மீளத்தருமாறு கோரிப் பொதுமக்கள் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையிலேயேஅரசாங்கம் தொழில் முயற்சியின் பெயரால் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தில் தமிழ் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ளாவிடின் அரசாங்கம் மறைமுகமாக முன்னெடுக்க விருக்கும் நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாகவே முன்னெடுக்கும் நிலைதோன்றி விடும். இதனைக் கருத்திற் கொண்டு, எங்களதுநிலம் பறிபோகாதிருக்க அரசாங்கம் அறிவித்துள்ளகாணித் துண்டங்களுக்கு எம்மவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இவ் விண்ணப்பங்களின் பரிசீலனையின் போது தமிழ் மக்கள் கடந்தகாலங்களைப் போன்று பேரினவாதத்தின் இன மூழ்கடிப்புக்கு ஆளாகாது இருப்பதை தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எப்பாடுபட்டாயினும் உறுதி செய்தாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.