மன்னார் நிருபர்
21-11-2020
உலக மீனவ தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் விசேட ஒன்றுகூடல் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் பெனடிற் குரூஸ் தலைமையில் இன்று சனிக்கிழமை 21ம் திகதி காலை 9 மணியளவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இடம் பெற்றது.
நிலம் மற்றும் கடல் வளச் சுரண்டலில் இருந்து மீனவ சமூகத்தைப் பாதுகாத்தலும் நிலை பேறான மீன்பிடி கொள்கையை உருவாக்குதலும் எனும் தொணிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஒன்று கூடலில் எல்லை கடந்த இந்திய மீனவர்களில் வருகை மற்றும் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதே நேரத்தில் நாட்டில் நடை முறையில் உள்ள மீனவர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் மீனவர்கள் பின் பற்ற வேண்டிய பல்வேறு சட்ட முறைகள் தொடர்பாக கடற்றொழில் நீரியல் திணைக்களத்தின் பரிசோதகர் பவனிதி ஊடாக விசேட தெளிவு படுத்தல்களும் வழங்கப்பட்டது.
குறித்த மீனவ தின ஒன்று கூடலில் கடற்றொழில் திணக்கள அதிகாரிகள் மீனவ சமாச தலைவவர்கள் வடமாகான மீணவ இணைய அங்கத்தவர்கள் மீனவ பெண்கள் குழுவினர் சுகாதார நடை முறைகளை பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.