கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சி – திருவையாறுப் பகுதியில் மரணமடைந்தவரின் இறுதிக்கிரியைக்காக கொழும்பு ஆட்டுப்பட்டிததெரு பகுதியில் இருந்து வருகை பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர், தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை, கண்டாவளைப் பகுதியில் வீதி அமைப்பு வேலைக்காக வருகை தந்து, தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப் படையைச் சேர்ந்த எட்டுப் பேருக்கும் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.