இலங்கையில், பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிற்கு ட்பட்ட அடலுகம பிரதேசம் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஒரே சந்தர்ப்பத்தில் 17 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணிக்கையுடன் அடலுகமவில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.