(மன்னார் நிருபர்)
(23-11-2020)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை(24) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளை இன்றைய தினம் (23) திங்கட்கிழமை மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-குற்றவியல் நட வடி முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி இலக்க வழக்குத் தொடர்பாக தாங்கள் 24-11-2020 நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றத்தின் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-குறித்த கட்டளை அழைப்பானை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.