மன்னார் நிருபர்
(23-11-2020)
நாடளாவிய ரீதியில் தரம் 6 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்காக பாடசாலைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (23) ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது..
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 6 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பாடசாலைக்குச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
பாடசாலை நுழைவாயில்களில் மாணவர்களின் வெப்பம் அளவீடு செய்யப்பட்டதோடு மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கை சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பாடசாலைகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பாடசாலைகளுக்கு முன்பாக வீதிப் போக்குவரத்துப் பிரிவு போலீசார் கடமைகளில் ஈடுபட்டு வருவதோடு தரம் 6 மற்றும்7 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் சிலரை பெற்றோர் பாடசாலைக்கு அழைத்து வந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கின்ற நிலையில் மாணவர்கள் குறிப்பாக உயர்தர மாணவர்கள் ஆர்வத்துடன் பாடசாலைக்குச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது