யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களிற்கு அஞ்சலி செலுத்த முயன்ற அருட்தந்தை நேற்று (27) கைது செய்யப்பட்டிருந்தார். அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு எதிராக அமைந்துள்ள புனித மடுத்தினார் குருமடத்திற்குள், யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
நேற்று மாலை 5.55 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
சமூகங்களிற்கிடையில் மோதலை ஏற்படுத்த முயன்றமை, நீதிமன்ற உத்தரவை மீறியமை, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை நினைவுகூர முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிசார் அறிவித்துள்ளனர்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களிற்கு குருமடத்திற்குள் அஞ்சலி செலுத்த முயன்ற அருட்தந்தையை, குருமடத்திற்குள் நுழைந்து கைது செய்தமை தமிழ் மக்களை பெரும் அச்சத்திற்குள் தள்ளியுள்ளது