(வன்னி நிருபர்)
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த பலத்த மழையினால், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
கனகாம்பிகை குளம் வான்பாய்வதால் அதிக நீர் வெளியாகிறது.
இதனால் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு, பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.