நாடளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் வடக்கில் மவீரர் தினத்தை நினைவுகூருவது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் கடும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
2010 ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கில் அவருக்காக பிரச்சாரம் செய்தது நான்தான் என்பதை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறந்துவிட்டார் என மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பொன்சேகா தன்னை தவறாக புரிந்து கொண்டதாக மனோ கணேசன் கூறியபோது இருவருக்கும் இடையிலான வாதம் சூடுபிடித்தது.
மாவீரர் நினைவு தினத்தில் முன்னாள் போராளிகளை நிறைவு கூறும் விடயத்தில் தவறாக புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழர்கள் தங்கள் உறவுகளை நினைவில் வைத்துக் கொள்ளவும் அவர்களை நினைவு கூரவும் அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கூறியதாக மனோ கணேசன் குறிப்பிட்டார்.
புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதால் அதனை நீக்குமாறுகோரி தமிழ் அரசியல்வாதிகள் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு நான் கூறிய தகவலை தெளிவாக புரிந்து கொள்ளமுடியாமல், மேல் நோக்கி பார்த்து உமிழ்வதுபோல் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.
2010 ஜனாதிபதித் தேர்தலின் போது மற்றவர்கள் தலைமறைவாக இருந்தபோது தான் அவருக்காக வடக்கில் பிரச்சாரம் செய்தமையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறந்துவிட்டார் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.