கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த அரச பேருந்து பாதசாரிகள் கடவையில் துவிச்சக்கர வண்டியில் கடந்த நபருடன் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த நபரினை வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் வைதியர் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காது எந்தவிதமான முதல் உதவிகளும் வழங்காது வெளியில் வைத்து கை நரம்பு நாடியை பிடித்து குறித்த நபர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனார் என்று மக்கள் விசனம் தெரிவித்தனர்
இவ்வேளை படுகாயங்களுடன் கொண்டு செல்லப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரை உயிருடன்தான் இருந்தார் அவருக்கு எந்தவிதமான முதல் உதவிகளும் வழங்காமையாலே குறித்த நபர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்துடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர் அதனால். பளை வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
அமைதியின்மை தொடர்பாக அறிந்த பளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அமைதியின்மையை கட்டுப்படுத்தினர்.
விபத்துக்குள்ளான நபர் பளை அரசர் கேணியை சேர்ந்த 68 வயது உடைய பொன்னையா சிவராசா என தெரிவித்ததுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பளை போலீசார் தெரிவித்தனர்
குறித்த விடயம் தொடர்பாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி
க.பகீரதன் அவர்களிடம் வினாவிய போது நேற்றைய தினம் விபத்துக்குள்ளான நபரொருவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார் கொண்டுவரப்பட்ட நபரினை வெளி நோயாளர் பிரிவை இருந்த வைத்தியர் பார்வையிட்டார் அப்பொழுது விபத்துக்குள்ளான நபர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது அத்துடன் குறித்த நபரின் இறப்பில் இந்தவிதமான மருத்துவ தவறுகளும் இடம்பெற்று இருப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றும் இல்லை என குறிப்பிட்டதுடன் அவர் மேலும் குறிப்பிடுகையில்.
இறந்தவரின் உடலை நாம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்புவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றும் உண்மையிலே இறந்தவர்களின் உடலினை எமது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான வசதிகள் எதுவும் இல்லை. அப்படி அனுப்புவது என்றால் எமது கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையில் உள்ள வானத்திலே அனுப்புவது வழமை.
அத்துடன் எம்மிடம் ஒரு அவசர சிகிச்சை வாகனம் உள்ளதால் இறந்தவர்களின் உடலை அவசர சிகிச்சை வாகனத்தில் அனுப்புவது இல்லை.
மாறாக இறந்தவரின் உறவினர்களின் உதவியுடன் வாகனங்களில் அனுப்புவது வழமை ஏனென்றால் இங்கு இறந்தவரின் உடலை பாதுகாப்பதற்கான வசதிகள் எதுவும் இல்லை எனவும் நாம் குறைந்த ஆளனித்துவத்துடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார். வைத்திய சாலையில் விபத்தில் உயிரிழந்தவரிற்கு எவ்விதமான மருத்துவ தவறுகளும் இடம்பெறவில்லை- பளை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி க.பகீரதன்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிகளை ஏற்றி பயணித்த அரச பேருந்து பாதசாரிகள் கடவையில் துவிச்சக்கர வண்டியில் கடந்த நபருடன் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் .
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குறித்த நபரினை வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் வைதியர் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காது எந்தவிதமான முதல் உதவிகளும் வழங்காது வெளியில் வைத்து கை நரம்பு நாடியை பிடித்து குறித்த நபர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனார் என்று மக்கள் விசனம் தெரிவித்தனர்
இவ்வேளை படுகாயங்களுடன் கொண்டு செல்லப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரை உயிருடன்தான் இருந்தார் அவருக்கு எந்தவிதமான முதல் உதவிகளும் வழங்காமையாலே குறித்த நபர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்துடன் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர் அதனால். பளை வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
அமைதியின்மை தொடர்பாக அறிந்த பளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அமைதியின்மையை கட்டுப்படுத்தினர்.
விபத்துக்குள்ளான நபர் பளை அரசர் கேணியை சேர்ந்த 68 வயது உடைய பொன்னையா சிவராசா என தெரிவித்ததுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என பளை போலீசார் தெரிவித்தனர்
குறித்த விடயம் தொடர்பாக வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி
க.பகீரதன் அவர்களிடம் வினாவிய போது நேற்றைய தினம் விபத்துக்குள்ளான நபரொருவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார் கொண்டுவரப்பட்ட நபரினை வெளி நோயாளர் பிரிவை இருந்த வைத்தியர் பார்வையிட்டார் அப்பொழுது விபத்துக்குள்ளான நபர் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது அத்துடன் குறித்த நபரின் இறப்பில் இந்தவிதமான மருத்துவ தவறுகளும் இடம்பெற்று இருப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றும் இல்லை என குறிப்பிட்டதுடன் அவர் மேலும் குறிப்பிடுகையில்.
இறந்தவரின் உடலை நாம் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்புவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்றும் உண்மையிலே இறந்தவர்களின் உடலினை எமது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான வசதிகள் எதுவும் இல்லை. அப்படி அனுப்புவது என்றால் எமது கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையில் உள்ள வானத்திலே அனுப்புவது வழமை.
அத்துடன் எம்மிடம் ஒரு அவசர சிகிச்சை வாகனம் உள்ளதால் இறந்தவர்களின் உடலை அவசர சிகிச்சை வாகனத்தில் அனுப்புவது இல்லை.
மாறாக இறந்தவரின் உறவினர்களின் உதவியுடன் வாகனங்களில் அனுப்புவது வழமை ஏனென்றால் இங்கு இறந்தவரின் உடலை பாதுகாப்பதற்கான வசதிகள் எதுவும் இல்லை எனவும் நாம் குறைந்த ஆளனித்துவத்துடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.