இலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மரணம் இன்றையதினம் பதிவாகியுள்ளது. பொரளை ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 20 நாட்கள் வயதுடைய கைக்குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது
நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே கடுமையான நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த குழந்தைக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கொழும்பு தொட்டலக பகுதியை சேர்ந்த குறித்த குழந்தையின் பெற்றோருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.