கிழக்குமாகாணத்தில் கொரோனாத் தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.
• கிழக்கில் இதுவரை 371 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை
• கல்முனைப் பிராந்தியத்தில் 225பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
• அந்தப்பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
கல்முனைப் பிராந்தியத்தில் புதிதாக அட்டாளைச் சேனையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 22பேர் தொற்றிலுள்ளனர்.
இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மற்றும் ஏனைய இடங்கள் மூலமாக 23பேரும் பேலிய கொடகொத்தணி மூலமாக 348பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.
கல்முனைப் பிராந்தியத்தில் புதிதாக உருவெடுத்த அக்கரைப்பற்று கொத்தணி மூலம் என்ற 225 தொற்றாளிகளுடன் கல்முனைப் பிராந்தியம் முன்னணி வகிக்கிறது. முதலாவது அலையில் இருவர். ஆக இங்கு கடந்த மார்ச் மாதத்திலிருந்து 225பேர் தொற்றுக்கிலக்காகியுளளனர்.
இறுதியாக சம்மாந்துறையில் 4பேரும் சாய்ந்தமருதில் 4 பேரும் நற்பிட்டி முனையில் ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக
• மட்டக்களப்பு மாவட்டத்தில் 94 பேரும்
• கல்முனை பிராந்தியத்தில் 225 பேரும்
• திருமலை மாவட்டத்தில் 16 பேரும்
• அம்பாறை பிராந்தியத்தில் 13 பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
கிழக்கில் தற்போதைய நிலைவரப்படி கல்முனைப்பிராந்தியம் 225 தொற்றுக்களுடன் முன்னிலைவகிக்கிறது.அதிலும் புதிதாக உருவான அக்கரைப்பற்று கொத்தணி 192 அதிகூடுதலான தொற்றுக்களை கொண்டிருக்கிறது. கிழக்கிலே அதிகூடிய தொற்றுள்ள தனியொருபிரதேசமாக அக்கரைப்பற்று மாறியுள்ளது.
அடுத்ததாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 60 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடியாக இறக்காமத்தில் 11 பேரும் ஏறாவூரில் 10 பேரும் இனங்காணப்பட்டிருந்தனர்.
• சிகிச்சை நிலையங்களில் 1387 அனுமதி
கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 368 கொரோனாத் தொற்றாளர்கள்; சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (07.12.2020) வரை 1387 பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1012 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 07 பேர்இடமாற்றப்பட்டுள்ளனர். இன்னும் 95 கட்டில்கள்; எஞ்சியுள்ளன.
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 509 பேர் அனுமதிக்கப்பட்டு 380பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 125 பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர். இன்னும் 5 கட்டில்கள் எஞ்சியுள்ளன.
மேலும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 20 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 67பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 80 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
• 15829பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில் 15829 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப் பகுதியில் மட்டும் 5056 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
• கல்முனைப்பிராந்தியத்தில் 6912 சோதனைகளும்
• மட்டக்களப்பில் 5874 சோதனைகளும்
• அம்பாறையில் 1626சோதனைகளும்
• திருகோணமலையில் 1406 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அக்கரைப்பற்று கொத்தணியில் 192.
புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணியில் இதுவரை 192 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அக்கரைப்பற்று பொதுச்சந்தையிலிருந்து இதுவரை அக்கரைப்பற்றில் 139பேரும் அட்டாளைச்சேனையில் 22 பேரும் சாய்ந்தமருதில் 11பேரும் ஆலையடிவேம்பில் திருக்கோவிலில் தலா7பேரும் இறக்காமம் 5 பேரும் கல்முனை வடக்கில் ஒருவருமாக மொத்தம் 192 பேர் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையின் மூலமாக இனங்காணப்பட்டுள்ளனர்.