ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ பொது அமைப்பு ஒன்றின் சார்பில் கரையோர பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ள கிறிஸ்தவ அமைப்பு அதனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக குறிப்பிட்டுள்ளது.