ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச சேவையாளர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்குமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனால் வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
வடக்குமாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது பணிக்கு புறம்பாக பகுதிநேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ ஊடக நிறுவனம் ஒன்றில் செய்தியாளராகவோ அறிவிப்பாளராகவோ ஆசிரியராகவோ பணிபுரியும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தகவல்களை வழங்க மறுப்பவர்களிற்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபைக்குட்பட்ட அரச திணைக்களங்களின் தலைவர்களிற்கு மாகாண பிரதம செயலாளரால் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.