(யாழ் நிருபர்)
மருதனார்மடத்தில் நேற்றைய தினம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முச்சரக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மருதனாமடர் சந்தையில் உள்ளவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதன் முடிவுகள் வெளியாகி உள்ளன அதன்படி 31 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
இதில் மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும், நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரினுடைய உறவினர்கள் 7 பேருக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மருதனார்மடம் முடங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை இது கொத்தணியாகவும் மாற வாய்ப்புண்டு.