நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஆணொருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கும் பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவர் டிசம்பர் 11ஆம் திகதி உயிரிழந்ததுடன் இவரது இறப்புக்கு கொரோனா தொற்று நிமொனியா நிலைமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான ஆணொருவர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது இறப்புக்கான காரணம், நீரிழிவு உயர் நிலைமை மற்றும் கொரோனா தொற்று நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 149ஆக அதிகரித்துள்ளது