இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண், வத்தளை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவர் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலையில் 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.