கிளிநொச்சி சேவைச்சந்தையில் பி.சி.ஆர்.மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பெறப்பட்டன.
கிளிநொச்சி சேவைச்சந்தைக்கு வருகை தரும் வெளிமாவட்ட சாரதிகள் மற்றும் சந்தை வியாபாரிகளிடமிருந்து குறித்த மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) காலை பெறப்பட்டுள்ளன.
வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்த சாரதிகளிற்கும், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் உள்ளிட்ட 45 பேரிடமிருந்து குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு பெறப்பட்ட மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் பின்னர் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினரால் குறித்த மாதிரிகள் இன்று பெறப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பகுதியில், கொரோனா விழிப்புணர்வு செயற்றிட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.