(மன்னார் நிருபர்)
(14-12-2020)
புதிய மீன் பிடி விசைப்படகுகள் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல மீன் வளத்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில் குறித்த நடவடிக்கையினை கண்டித்து இன்று திங்கட்கிழமை(14) காலை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப காலமாக வெளி மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் இருந்து மீனவர்களின் மீன்பிடி படகுகளை விலைக்கு வாங்கி வந்து ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
புரெவி மற்றும் நிவர் புயல் காரணமாக மீன் பிடி விசைப்படகுகளை ராமேஸ்வரம் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்த மீன் வளத்துறையினர் அறிவுறுத்தியிருந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்த போதிய இடம் இல்லாததால் நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் பாலம் வழியாக பாம்பன் குந்துகால் பகுதியில் நிறுத்தினர்.
இதனால்; புதிய விசைப்படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படகுகளை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து இன்று திங்கட்கிழமை (14) புதிதாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 23 விசைப்படகுகளுக்கு மீன்வளத் துறையினரால் வழங்கப்படும் மீன் பிடி அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதனை கண்டித்து படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் என சுமார் 50 க்கும் மேற்பட்டோர்; மீன் வளத்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தையடுத்தது மீனவர்கள் கலைந்து சென்றனர் .இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படாமல் இலங்கையில் சேதமடைந்த படகுகளை மீட்டு வர முடியாமல் இருந்த படகுக்கான ஆவணங்களை கொண்டு நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில்; புதிய படகுகளை வாங்கி வந்து ராமேஸ்வரத்தில் தொழில் செய்து வருவதாகவும், மீன் வளத்துறை அதிகாரிகள் முழுமையாக படகுகளை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.