யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பத்தினரின் வீடு கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
கடந்த மாதம் பருத்தித்துறை, ஓடக்கரை, ஜே.402 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தாரும் தொற்றுக்குள்ளாகிய நிலையில் கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இன்று அவர்கள் நால்வரும் முழுமையான குணமடைந்த நிலையைில் வீடு திரும்பியிருக்கின்றனர்.
வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட்ட பொருட்கள், எண்பதாயிரம் ரூபா ரொக்கப்பணம் உட்பட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கும் பொதுச் சுகாதார உத்தியோகத்தருக்கும் குடும்பத்தினரால் முறையிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் வீடு திரும்பியவர்கள் வீடுகளில் இன்னமும் 07 நாட்கள் சுய தனிமையில் இருக்கவேண்டும் என்பதால் அந்தக் காலம் முடிந்த பின்னரேயே விசாரணை மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.