நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மவாட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக விசைப்படகில் புறப்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது கடற்படையினரால் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.