(மன்னார் நிருபர்)
(20-12-2020)
மன்னார் அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தினால் மன்-அல் அஸ்ஹார் தேசிய பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி கணித பாட மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய பயிற்சி புத்தகங்கள் சனிக்கிழமை (20) கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் எம்.வை.மாஹிர் தலைமையில் இருடம் பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் யதீஸ் அவர்கள் குறித்த பாடசாலையில் இருந்து க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் 35 மாணவ மாணவிகளுக்கு கணித பாட மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய பயிற்சி புத்தகங்களை வழங்கி வைத்தார்.
–கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதீப்படைந்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கு விக்கும் வகையில் மன்னார் அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி கணித பாட மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய பயிற்சி புத்தகங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.