இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 5 நாட்களாக இந்த போராட்டம் இடம்பெற்று வந்தது.
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி இந்த போராட்டம் முன்னெடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.