யாழ் நிருபர்
மருதனார்மடத்தில் கொத்தணியுடன் தொடர்புடைய 30 பேர் யாழ்ப்பாண மாநகர சுகாதார பணிமனையினரின் ஆளுகைக்குப்பட்டபகுதிகளில் குடும்பத்தோடு சுயதனிமைப்படுத்தப்பட்டு ள்ளதாக சுகாதார தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
யாழ்ப்பாண நகரப் பகுதியில் யாழில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் நடமாடியதன் காரணமாக நான்கு கடைகள் மற்றும் ஒரு சிற்றுண்டி உணவகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அங்கு கடமையாற்றியவர்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக் குள்ளாக்கப் பட்டுள்ளார்கள் அவர்களுக்கு எதிர்வரும் 26ம் திகதியளவில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் யாழ் மாநகரசபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.