ஜனவரி மாதத்தில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளரான விசேட மருத்துவ நிபுணர் ஹரித்த அலுத்கே இந்த எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக்காலம் மற்றும் வருட இறுதிவாரம் என மக்கள் நடமாட்டம் அதிகமாகின்ற தருணங்கள் ஏற்படுகின்ற நிலைமையில் அரசாங்கம் சுகாதாரத்துறை அதிகாரிகள் பயணத்தடைகளை விதிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று கூடுகின்ற கோவிட் தொற்று ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் இதுகுறித்து அவதானம் செலுத்தப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஜனவரி மாதத்தின் பின் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறிப்பாக வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.