பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் நாளை (23) அதிகாலை 2 மணிக்குப்பின்னர் இலங்கையில் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, மறுஅறிவித்தல் வரும்வரை பிரித்தானிய விமானங்கள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா தொற்று குறித்து சர்வதேச நாடுகள் மத்தியில் எச்சரிக்கை அதிகரித்துள்ள நிலையில் 40 ற்கும் மேற்பட்ட நாடுகள் விமான பயணத்தை இரத்து செய்துள்ளன.
இந்நிலையில் குறித்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது