கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சியை சேர்ந்த பெண் தலைமத்துவ குடும்பமான சுரேஷ்குமார் பூலோகசுந்தரி மூன்று பிள்ளைகளுடன் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்டு கண் பார்வை திறனை இழந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் அவரின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு தூள் அரைத்து விற்பனை செய்வதற்கு உதவுமாறு வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் வன்னி விழிப்புலனற்றோர் அமைப்பினால் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 11,000 பெறுமதியில் தூள் அரைத்து விற்பனை செய்வதற்கான மூலப்பொருட்களும் அதனை பொதி செய்வதற்கான சிறிய இயந்திரமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.