ஆசைப்படுவதற்கு யாருக்குமே சுந்திரம் உண்டு. ஆனால் இந்த மாவை சேனாதிராஜவிற்கு ஏன் இந்த ஆசை என்கிறார்கள்; வடஇலங்கையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களில் பலர்
இது இவ்வாறிக்க, கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் களமிறக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அண்மையில் (27) வவுனியாவில் இடம்பெற்றது. இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இதே போன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவும், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமெனபாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதன் போது குறிப்பிட்டுள்ளார். வடமாகாண சபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனுக்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும். முஸ்லிம் மக்களும் இவரை ஆதரிப்பர். எனவே, இவரை களமிறக்கி இலகுவாக வெற்றியடையலாமெனவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். எனினும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை எனவும் தெரியவருகின்றது.