மன்னார் நிருபர்
(15-03-2021)
மன்னாரில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு யுவதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து மடு பொலிஸ் நிலையம் முன்பு இன்று திங்கட்கிழமை காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் பெண்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து மன்னாரில் இருந்து மடுவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மடுரோட் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நாய் ஒன்று குறுக்கிட சாரதி பேருந்தை வீதியின் அருகாலே செலுத்த முயற்சித்த போது பள்ளத்திற்குள் சென்று குடைசாய்ந்துள்ளது.
குறித்த விபத்தில் அதிஸ்ரவசமாக எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.