-பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்
(மன்னார் நிருபர்)
(02-04-2021)
இரும்பு மனிதனாய் இதய சுத்தியோடு இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடிய இறைவனின் அடியவரே எமது ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
-அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
புள்ளி விபரங்களில் புலியாய் வெள்ளை ஆடையணிந்த புலியென எதிர்ப்பாளர்களினால் வர்ணிக்கப்பட்ட அஞ்சாத நெஞ்சன் இன்று அமைதியாய் துயில் கொள்கிறார்.
கம்பீரமான தோற்றம் கொண்டு சர்வதேசம் வரை எம் அநீதிகளை கொண்டு சென்ற ஆண்டகை எந்த நேரமும் மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து போராடிய ஒரு தலை மகனை இன்று தேசம் இழந்துள்ளது.
விடை காண முடியாத புதிராய் சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட நம் உரிமைக் குரலை ஒட்டு மொத்தமாய் முடக்கினர்.
அந்த உத்தம மனிதன் இன மத பேதமின்றி நீதிக்காய் உழைத்த ஒரு உத்தமன் இன்று நிரந்தரமாய் துயில் கொள்கிறார்.அவரின் கனவுகள் நிச்சயம் நிறை வேறும் அமைதியாய் உறங்குங்கள் தந்தையே.என குறித்த இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.