(மன்னார் நிருபர்)
(06-05-2021)
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகள் பொது மக்களின் 35 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் (6) வியாழக்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்றாஜ் தலைமையில் காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
இதன் போது டெலோ கட்சியின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் துணை அமைப்பாளர் பற்றிக் வினோ, கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.