முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் பயனாளியான மனேறஞ்சிதராசாவின் மகன் தருண் அவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி ஒன்றினை தந்துதவுமாறு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 22,250 பெறுமதியில் புதிய துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
![மாங்குளம் உயிரிழை அமைப்பின் பயனாளி மனேறஞ்சிதராசாவின் மகனுக்கு வட்டு- இந்து வாலிபர் சங்கம் புதிய துவிச்சக்கர வண்டியை வழங்கியது](https://uthayannews.ca/wp-content/uploads/2021/05/aa69666b-5ea3-4ec4-a938-e8923b878899.jpg)