(மன்னார் நிருபர்)
(08-06-2021)
தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட பணிமனையூடாக கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள முடக்க நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதீக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு நேற்று அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில்,தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
-மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 15 கிராமங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 70 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக தாய் நிலம் அறக்கட்டளையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயம் தெரிவித்தார்.