(மன்னார் நிருபர்)
(09-06-2021)
நாடளாவிய ரீதியில் நீண்ட நாட்களாக அமுல் படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக அன்றாட கூலி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் நேரடியாக திக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அன்றாட உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் சில குடும்பம்பங்கள் கடற்கரையோர பகுதியில் உள்ள நீரில் மட்டி பொறுக்கி உணவு தேவையை பூர்த்தி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீண்ட நாற்காள் பயணத் தடை நடுத்தர குடும்பங்களையே பாதித்துள்ள நிலையில் உரிய தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் அத்தியாவசி பொருட்களின் விலையேற்றத்தினால் அன்றாட கூலித் தொழிலில் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
பயணத்தடை ஒரு புறம் மக்களின் வாழ்வாதரத்தை கடுமையாக பாதித்து வரும் நிலையில் அதிகரித்த விலையில் மரக்கறிகள் மற்றும் இதர பொருட்கள் விற்கப்பட்டு வருவதாலும் மீன்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுவதாலும் நடுத்தர குடும்பங்கள் உட்பட அதிகமானோர் கடற்கரையோர பகுதியில் சேற்றுக்கு நடுவில் காணப்படும் மட்டியை சேகரித்து உணவு தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
சிலர் மட்டி பொறுக்குதலை பொழுது போக்குக்கு செய்கின்ற பொழுதிலும் பலர் உணவுக்காகவும் இன்னும் சிலர் மட்டியில் இருந்து சேகரித்த சதைகளை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர்.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமூர்த்தி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சமூர்த்தி பெறாத மற்றும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கடற்கரை யோரங்களில் மட்டியை உணவுக்காக சேகரித்து வருகின்றமையிளையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.