மன்னார் நிருபர்
17-06-2021
நாடளாவிய ரீதியில் நீண்ட நாட்களாக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட அன்றாடம் கூலி தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 35 குடும்பங்களுக்கு ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த சாம்பசிவன் அவர்களின் நிதி பங்களிப்பில் பசி இல்லா மன்னார் அமைப்பின் ஊடாக இன்று வியாழக்கிழமை (17) காலை நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சவேரியார்புரம் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்களுக்கே அரிசி,மா,பருப்பு,சீனி,கடலை உள்ளடங்களான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
முசலி பிரதேச சுகாதார பரிசோதகர், சவேரியார்புரம் கிராம சேவகர் மற்றும் பசி இல்லா மன்னார் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் இணைந்து மக்களுக்கான நிவாரண பொதிகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.