(19-09-2021)
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை மனைவி திருவலைக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 32 வயதான ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார்.
மனைவியுடன் சில நாள்கள் நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையிலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று (19) அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்ர் சந்தேக நபரான பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலில் 5க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.