(மன்னார் நிருபர்)
(26-09-2021)
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26) மன்னாரில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் சுடரினை ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மேலும், மன்னாரில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் நோக்கில் குறிப்பிட்ட இடங்களில் பொலிஸார் மற்றும் இராணுவம் காலை முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை சிவகரன் மேற்கொள்ள இருப்பதாக கூறி மன்னார் பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.