(10-10-2021)
கண்டி மறை மாவட்டத்தின் புதிய ஆயராக வலன்ஸ் மெண்டிஸ் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்.
இதைத் தவிர, சிலாபம் ஆயராகவும் வலன்ஸ் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று இலங்கையிலுள்ள வத்திகான் தூதுவர் அறிவித்துள்ளார்.
இவ்விடயத்தை, இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் தேசிய ஆணைக்குழுவின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான லால் புஷ்பதேவ பெர்னாண்டோ உறுதிப்படுத்தியுள்ளார்.
கண்டி ஆயர் ஜோசப் வியன்னி பெர்னாண்டோ ஓய்வு பெற்றதைத் தொடர்ந்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.