(13-10-2021)
வவுனியாவில் ஏ9 வீதியில் மாணிக்கவளவு சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதியில் மின் தடைப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கன்டர் ரக வாகனம் மின் கம்பமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது சாரதிக்குச் சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த விபத்தினால் மின் கம்பம் உடைந்து விழுந்த நிலையில் ஓமந்தை பகுதியின் சில கிராமங்களுக்கான மின்சாரம் அதிகாலை 3 மணியிலிருந்து தடைப்பட்டிருந்ததாகவும் தெரியவருகிறது.