இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலிருந்து கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு கனடாவின் ஏயர் கனடா விமான சேவையின் விமானங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக ஏயர் கனடா தெரிவித்துள்ளது.
கனடா அரசாங்கத்தின் அனுமதியுடன் தான் இந்தியாவில் இருந்தும் ரொரன்ரோவிலிருந்தும்; மற்றும் இந்தியாவுக்கு செல்லும் நேரடி விமான சேவையையும் கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது அத்துடன் கனடாவின் மொன்றியால் விமான நிலையத்தையும் – டெல்லியையும் இந்த புதிய விமான சேவையானது இணைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியால் நகரில் அதிகரித்து வரும் இந்திய வம்சாவழி மக்களின் எண்ணிக்கையை ஒட்டீயே இந்த மொன்றியால் இணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது இதன் மூலம். மொன்றியால் வாழ் இந்திய சமூகத்திற்கு ஏயர் கனடா வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை வழங்கவுள்ளது எனவும் ஏயர் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதோடு கூடுதலாக ரொறன்வோவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்தும் டெல்லிக்கு விமான சேவை அக்டோபர் 15 முதல் வாரத்திற்கு 10 விமானங்களாக அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறான ஏற்பாடுகள் ஏயர் கனடா நிறுவனம் செய்துள்ள வேளையில் ஏற்கனவே டெல்லியில் இருந்து கனடாவின் வான்கூவர் மற்றும் ரொறன்வோவுக்கு ஏயர் இந்தியா நேரடி விமான சேவையை வழங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.